நெல்லை: நெல்லையில் விரைவில் கலைஞர் நூலகம் அமைக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்து உள்ளார். நூலகங்களின் நிலையான வளர்ச்சிக்கு புதிய யுக்திகள் குறித்த 2 நாள் தேசிய அளவிலான கருத்தரங்கு பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்வியியல் கல்லூரியில் நேற்று தொடங்கியது. கருத்தரங்ககை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து சபாநாயகர் அப்பாவு பேசியதாவது: நூலகத் துறையின் இப்போதைய மாற்றங்கள் குறித்தும், வருங்காலத்தில் அதில் புகுத்த வேண்டிய புதிய யுக்திகள் குறித்தும் நாடு முழுவதிலும் இருந்து, பல நூலகர்கள் இந்த கருத்தரங்கிற்கு வந்து கருத்து கூறுவது பெருமையளிக்கிறது.