தாம்பரம்: தாம்பரம் சானடோரியம் பகுதியில் மெப்ஸ் ஏற்றுமதி வளாகம் எதிரே ஜிஎஸ்டி சாலையில் உள்ள சிக்னலில் எல்இடி விளக்குகள் எரியும் விதமாக அமைக்கப்பட்டுள்ள சிக்னலை தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் நேற்று தூக்கி வைத்தார். தொடர்ந்து, மெப்ஸ் ஏற்றுமதி வளாகத்தில், ரூ.16 லட்சம் செலவில் வாகனங்களின் எண்களை கண்டறிந்து பதிவு செய்யும் விதமான அதிநவீன சிசிடிவி கேமராக்கள், அதன் காட்சிகளை பதிவு செய்யும் சூப்பர் கணினி ஆகியவற்றையும் துவக்கி வைத்தார். போக்குவரத்து காவல் அதிகாரிகள் விதிமுறையை மீறும் வாகனங்களின் உரிமையாளர்களிடம் இருந்து ஆன்லைன் மூலமாக அபராதம் வசூலிக்கும் கருவிகளை வழங்கி நடைமுறைப்படுத்தினார்.