சென்னை: கர்நாடக மாநிலம் பெங்களூரு அடுத்த மச்சப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மணிகிருஷ்ணா. இவர், தனது குடும்பத்தோடு நேற்று முன்தினம் மதுராந்தகம் அடுத்த ஆதிபராசக்தி கோயிலுக்கு வந்தார். பின்னர், தரிசனம் முடித்து விட்டு, நேற்று காலை மாமல்லபுரம் சுற்றுலா வந்தார். கடலில் குளிக்கும்போது, எதிர்பாராத விதமாக அவரது மகள் சுமிதா (15), ராட்சத அலையில் அடித்துச் செல்லப்பட்டாள். அக்கம்-பக்கத்தினர் மீட்க முயன்றனர். ஆனால், அதற்குள் சுமிதா தண்ணீரில் மூழ்கி விட்டாள்.