சென்னை: தமிழ் மொழி தேர்வில் தேர்ச்சி பெறாமல் அரசு பணிகளில் அமர முடியாது என்ற சட்ட திருத்தத்தை தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ளது. அரசாணைக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் சட்ட மசோதாவை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அரசு மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களிலும் இளைஞர்கள் 100 சதவிகிதம் பணி கிடைப்பதை உறுதி செய்ய சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது.