சென்னை: கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் 3 பேர், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் உள்ளிட்ட 62 வழக்கறிஞர்களை மூத்த வழக்கறிஞர்களாக அறிவித்து சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் அறிவிப்பின்படி மூத்த வழக்கறிஞர்களாக தங்களை அறிவிக்க கோரி 130க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்தனர். இவர்களிடம் நடந்த நேர்காணல் உள்ளிட்ட தேர்வுகளின் அடிப்படையில் 81 வழக்கறிஞர்களின் பெயர்கள் தேர்வு பட்டியலில் பரிசீலிக்கப்பட்டன. இவர்களில் 62 பேர் இறுதியாக மூத்த வழக்கறிஞர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் தனபால் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளார்.