சென்னை: உழைப்பால் தன்னை மட்டுமின்றி தனது நாட்டையும் உயர்த்திக் காட்டியவர்கள்தான் தமிழர்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பல நாடுகளில் தவிர்க்க முடியாத சக்தியாக தமிழர்கள் விளங்கி வருகிறார். கடற்படை கொண்டிருந்த சோழ மன்னர்கள் மேற்கொண்ட பயணங்கள் பண்பாட்டு உறவுகளாக வளர்ந்திருக்கின்றன எனவும் கூறினார்.