தாம்பரம், :தாம்பரம் மாநகர காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையை தடுக்க காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். இதை தொடர்ந்து, போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தாம்பரம் ரயில் நிலையம் அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் தனிப்படை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். அதில், அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதையடுத்து அவரிடம் சோதனை நடத்தியபோது அவரிடம் இருந்த பையில் சுமார் 6 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. அவரை தாம்பரம் காவல் நிலையத்தில் தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர்.