சென்னை: சட்டபேரவை எதிர்கட்சித்துணை தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் தான் முடிவெடுக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை, தலைமை செயலகம் சட்டபேரவை கூட்டரங்கில் இன்று காலை 10 மணிக்கு கூட்டத்தொடர் தொடங்கியது. இதில் மறைந்த தலைவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மறைந்த உறுப்பினர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.