சென்னை: சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் ரூ.24.98 மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாயவிலை கடையை திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். சென்னை, தேனாம்பேட்டை மண்டலம், ராயப்பேட்டை மிர்ஷா ஹைதர் அலிகான் தெருவில் 2021-22ம் ஆண்டிற்கான சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.24.98 லட்சத்தில் கட்டப்பட்ட இரண்டு நியாயவிலைக் கடையை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். மேலும், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தினத்தை மகிழ்ச்சியோடு கொண்டாடும் வகையில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ.1000 ரொக்க பணம் உள்ளடக்கிய பொங்கல் பரிசு தொகுப்யையும் அவர் வழங்கினார்.