மயிலாடுதுறை: மயிலாடுதுறை மயூரநாதர் கோயிளுக்கு யானை கொண்டுவரப்பட்டு 50 ஆண்டுகள் ஆனதை பக்தர்கள் விமர்சையாக பொன்விழா எடுத்து கொண்டாடினர். விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கிய இந்த விழாவில் காவிரியில் இருந்து புனித நீர் யானை மீது வைத்து எடுத்து வரப்பட்டுள்ளது. யானைக்கு தீபாராதனை செய்து வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறையில் தேவார பாடல் பெற்ற பழமை வாய்ந்த மயூரநாதர் கோயிளுக்கு அபயாம்பிகை யானை 1972ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.