கோபி: ஈரோடு மாவட்டம் கோபியில் திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி நேற்று அளித்த பேட்டி: மகாராஷ்டிரா என்ற மாநிலத்திற்கு பெரியநாடு என்று அர்த்தம். முதலில் அந்த மாநிலத்தின் பெயரை மாற்றிவிட்டு அதன்பிறகு தமிழ்நாட்டை பற்றி ஆளுநர் ரவி பேசலாம். தமிழ் அறிஞர்களுக்கு புலப்படாத ஒரு செய்தி எங்கிருந்தோ வந்த ஆளுநருக்கு தெரிந்துள்ளது போன்று பேசிக் கொண்டிருக்கிறார். தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் கொடுத்துள்ளார்.