வல்லூரில் 210 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியது

சென்னை: வடசென்னை அனல் மின் நிலையத்தில், தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு  மீண்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் உள்ளது வட சென்னை அனல் மின் நிலையம். இங்கு முதலாவது நிலையில் மூன்று அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தியும், இரண்டாவது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தி என மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் 1வது நிலையின் 1வது அலகில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டதை தொடர்ந்து மீண்டும் 210மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

Related Stories: