வடசென்னை அனல் மின்நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

சென்னை: வடசென்னை அனல் மின்நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, மீண்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி நேற்று பாதிக்கப்பட்டது. மீஞ்சூர் அருகே, அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல் மின்நிலைய முதல் நிலையின் 3 அலகுகளில் தலா 210 மெகாவாட், 2வது நிலையின் 2 அலகுகளில் தலா 600 மெகாவாட் என மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று காலை முதல் நிலையின் 1வது அலகில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. பழுதை சீரமைக்கும் பணிகளில் ஏராளமான ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து, அனல் மின்நிலைய உயரதிகாரி ஒருவர் கூறுகையில்:

இந்த அனல் மின்நிலையத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு தற்காலிகமானது. அதை சரி செய்யும் பணிகளில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் அது சரி செய்யப்பட்டு  மின் உற்பத்தி தொடங்கும், என்றார்.

Related Stories: