நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் பெரியம்மை நோய் தாக்குதலால் பசு மாடுகள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். நாமக்கல் மாவட்டம் பெரியமணலி ஜேடர்பாளையம் பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் கால்நடை வளர்ப்பை பிரதான தொழிலாக கொண்டுள்ளன. இப்பகுதிகளில் முறையான தடுப்பூசி செலுத்தப்படாததால் பசுமாடுகளை தொடர்ந்து தற்போது கன்றுக்குட்டிகளும் கோமாரி, பெரியம்மை போன்ற நோய்கள் தாக்கி உயிரிழந்து வருவது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.