திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் தீபமலை உச்சியில் தடையை மீறி நேற்று முன்தினம் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் உள்பட 3 பேர் சென்றனர். இதையறிந்த வனத்துறையினர் மலை உச்சிக்கு விரைந்து சென்றனர். அப்போது, அவர்கள் தீபமலையை டிரோன் மூலம் வீடியோ எடுத்து கொண்டு இருந்தனர். இதை பார்த்த வனத்துறையினர், அவர்கள் பயன்படுத்திய அதி நவீன கேமரா பொருத்தப்பட்ட டிரோனை பறிமுதல் செய்தனர்.