சென்னை: நாட்டுப்புற கலைஞர்களின் தேவையை முதலமைச்சரிடம் தெரிவித்து விரைவில் பூர்த்தி செய்யப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். சென்னை இலயோலா கல்லூரி மற்றும் மாற்று ஊடக மையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த வீதி விருது வழங்கும் விழாவில் 100-க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்களுக்கு விருது மற்றும் தலா ரூ.1000 வழங்கப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்ற அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அனைவருக்கும் சமூக நிதி, சமஉரிமை, பொருளாதார வளர்ச்சி என்பதில் இந்த அரசு எவ்வளவு கவனம் கொண்டுள்ளதோ, அதேபோல கலை மற்றும் பண்பாட்டிலும் அக்கறை கொண்டுள்ளது என்றார்.