திருவொற்றியூர்: திருவொற்றியூரில் இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாமை எம்எல்ஏ கே.பி.சங்கர் நேற்று தொடங்கி வைத்தார். சென்னை திருவொற்றியூரில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில், இலவச கண் பரிசோதனை முகாமை திருவொற்றியூர் மாநகராட்சி மருத்துவமனையில் நேற்று நடைபெற்றது. இதில், மண்டலக் குழு தலைவர் தி.மு.தனியரசு தலைமை வகித்தார். முகாமை, கே.பி.சங்கர் எம்எல்ஏ குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்த, முகாமில் கண் பார்வை குறைபாடு, கண்புரை பரிசோதனை செய்யப்பட்டு தேவையானவர்களுக்கு கண்ணாடி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.