ஆண்டிபட்டி: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் அணையின் நீர்மட்டம் தற்போது 62 அடியாக சரிந்துள்ளது. மேலும், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக பாசனப் பகுதி விவசாயிகள், தங்கள் பகுதிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து, கடந்த 2 நாட்களுக்கு முன்பு வைகை அணையில் இருந்து இருந்து வினாடிக்கு 2,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. ராமநாதபுரம், விருதுநகர் மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக கிருதுமால் நதி வழியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் தொடர்நது கோரிக்கை விடுத்தனர்.