சென்னை: திமுகவில் உள்ள அணிகளின் பொறுப்பாளர்களாக திமுக துணை பொது செயலாளர்கள் 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக பொது செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுக பொது செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்ட அறிவிப்பு:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், கடந்த 28ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள “கலைஞர் அரங்கத்தில்” திமுகவின் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. இதில் தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றும் போது திமுக அணிகளின் பொறுப்பாளர்களை அறிவித்தார். அதன்படி திமுக துணை பொது செயலாளர் ஐ.பெரியசாமி விவசாய அணி, விவசாய தொழிலாளர் அணி, மருத்துவர் அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி, தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.