திருவொற்றியூர்: கேரளா மாநிலம், கொல்லம் மாவட்டம், கொட்டாராகரா பகுதியில் 68வது தேசிய சீனியர் ஆண்கள், பெண்கள் பூப்பந்தாட்ட பட்டயப் போட்டி கடந்த 24ம் தேதி முதல் வரும் 28ம் தேதி நடைபெறுகிறது. இதில் தமிழகத்தில் 30 மாவட்டங்களை சேர்ந்த 20 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தமிழ்நாடு பூப்பந்தாட்ட கழகம் சார்பில் திருவொற்றியூரில் 5 நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.