சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை, சென்னை, கோவை மாநகராட்சியில் நிறைவேற்றிய தீர்மானங்கள் செல்லும்: சென்னை ஐகோர்ட்

சென்னை: சென்னை மற்றும் கோவை மாநராட்சியின் சொத்துவரியை உயர்த்துவது தொடர்பாக தமிழக அரசு கடந்த மார் 30-ம் தேதி அரசாணை பிறப்பித்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த மே 30-ம் தேதி சென்னை மாநகராட்சி சொத்துவரி உயர்த்தியது தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்த அரசாணை மற்றும் சென்னை மாநகராட்சியின் தீர்மானத்தை எதிர்த்து கிச்சென்னை உயர்நீதிமன்றத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் தொடர்பட்டிருந்தது.

இந்த வழக்குகள் நீதிபதி அனிதா சுமந்த் முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் மனுதாரர் தரப்பில் சொத்துவரியை உயர்த்துவது தொடர்பாக மாநகராட்சி தான் முடிவெடுக்க வேண்டுமே தவிர அரசு தீர்மானிக்க முடியாது என வாதிடப்பட்டது. மேலும் மத்திய நிதிக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், சொத்துவரி கணக்கிடும் நடைமுறையை முறையாக பின்பற்றவில்லை எனவும் வாதிடப்பட்டது.

இதற்கு பதிலளித்த அரசு தரப்பில் சென்னையில் 1998-ம் ஆண்டுக்கு பின் சொத்துவரி உயர்த்தப்படவில்லை எனவும், வரியை உயர்த்துவதுகான அவசியம் குறித்தும், ஆவண ஆதாரங்களுடன் உயநீதிமன்றத்தல் தெரிவிக்கப்பட்டது. மேலும் பணவீக்கம், சந்தை நிலவரம், போன்ற பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்து நிதித்துறை செயலாளர் தலைமையிலான குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் சொத்துவரி உயர்த்தப்பட்டதாகஅரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 1977-ம் ஆண்டு முதல் பின்பற்றபட்ட நடைமுறையை கடைப்பிடித்து தற்போதும் சொத்துவரி உயர்த்தப்பட்டதாக கூறி, அது சம்பந்தமான ஆவணங்களையும் தாக்கல் செய்யப்பட்டது. அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதி மக்கள் நலத்திட்டங்களை தேவையான நிதியையும் அரசின் செலவீனங்களுக்கான வருவாய் திரட்டுவதும், வரிவிதிப்பால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை சமன்படுத்துவம் ஒரு மக்கள் நல அரசுக்கு அவசியமானது என்பதால் வரிவிதிப்பை வெளிப்படை தன்மையுடன் மேற்கொள்ள வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

நாட்டின் பொருளாதார நலனுக்காக நிதிகுழு அளித்த பரிந்துரை படி சொத்துவரியை உயர்த்துவதில் எந்த தவறும் இல்லை என தெரிவித்திருந்த நீதிபதி, சொத்துவரி உயர்த்துவது குறித்த அரசாணை என்பது ஆலோசனை ஆகியுள்ளதே தவிர உத்தரவாக இல்லை என்பதை தெளிவுபடுத்தினார். இந்த அரசாணையில் அடிப்படையில் சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இத்தனை ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்த சொத்துவரி மாற்றியமைக்கப்பட்டதற்காக காரணங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்ட நீதிபதி சொத்துவரி தொடர்பான அரசாணையும், மாநராட்சி தீர்மானமும் செல்லும் என தீர்ப்பளித்துள்ளார்.

மேலும் சென்னையை பொறுத்தவரையில் சொத்துவரி செலுத்தும் பல லட்சம் பேரில் 30 பேர் தெரிவித்த ஆட்சியப்பங்களை முறையாக பரிசீலித்து  பதிலளித்திருந்தால் இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வந்திருக்காது என கருத்து தெரிவித்த நீதிபதி, ஆட்சியபங்கள் கோரி முறையாக அறிவுப்பு வெளியிடப்படவில்லை என்று அதிருப்தியும் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

Related Stories: