திருப்போரூரில் பெரியார், எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை: அனைத்து கட்சியினர் பங்கேற்பு

திருப்போரூர்: தந்தை பெரியாரின் 49வது நினைவு நாள் மற்றும் எம்.ஜி.ஆர். 35வது நினைவு நாளையொட்டி, நேற்று திருப்போரூரில் உள்ள அவர்களது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திருப்போரூர் பேருந்து நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை, பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள பெரியார் சிலை ஆகியவற்றுக்கு அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் குமரவேல், முன்னாள் எம்.எல்.ஏ தண்டரை மனோகரன், நகர செயலாளர் முத்து மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.

மேலும், இள்ளலூர் சந்திப்பில் உள்ள அவரது படத்திற்கு ஓ.பி.எஸ் அணி நகர செயலாளர் சுதன் தலைமையில் மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தி.மு.க. சார்பில், ஒன்றியக்குழுத் தலைவர் இதயவர்மன், பேரூராட்சி தலைவர் தேவராஜ் ஆகியோர் தலைமையில், தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் லோகு தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்தனர். புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் கொள்கை பரப்பு செயலாளர் ஆலை சிவலிங்கம் தலைமையில் அக்கட்சியின் மாலை அணிவித்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் இராஜ்குமார் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்று கொண்டனர்.

Related Stories: