சென்னை: பெரியாரின் 49வது நினைவு நாளை ஒட்டி சென்னை அண்ணா சாலை சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலையில் இருந்து வேப்பேரியில் உள்ள பெரியார் திடல் வரை, திராவிட கழகத்தினர் அமைதி பேரணி மேற்கொண்டனர். சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவு இடத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தை கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, உள்ளிட்டவர்கள் மலர்வளையம் வைத்து மரியாதையை செலுத்தினர். இதனிடையே மக்கள் நீதிமைய கட்சி தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் தந்தை பெரியாருக்கு புகழ் வணக்கம் செலுத்தியுள்ளார்.