சென்னை: சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் பொதுமக்களிடம் குறை தீர்ப்பு முகாம் மூலம் மனுக்கள் பெற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல், சனிக்கிழமைகளில் காவலர்களிடன் குறை கேட்பு முகாம் மூலம் மனுக்கள் பெற்று உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ‘உங்கள் துறையில் முதல்வர்’ என்ற பெயரில் எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் முகாம் அமைத்து போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் இடைவிடாமல் 12 மணி நேரம் காவலர்களிடம் மனுக்கள் பெற்று நடவடிக்கை எடுத்தார்.