ஊரப்பாக்கம் ஊராட்சி திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாள் விழா

கூடுவாஞ்சேரி: காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றியம் ஊரப்பாக்கம் ஊராட்சி திமுக சார்பில், பேராசிரியர் அன்பழகனின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ஊரப்பாக்கம் ஊராட்சி தலைவர் பவானி கார்த்திக் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளரும் ஒன்றியக்குழு துணை தலைவருமான ஆராமுதன் கலந்துகொண்டு அன்பழ கனின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, கட்சி நிர்வாகிகள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

இதையடுத்து உறுப்பினர் சேர்க்கை படிவத்தை ஊரப்பாக்கம் கிளை செயலாளர்கள் 15 பேர் உட்பட ஒன்றிய கவுன்சிலர்களிடம்  வழங்கி,  அனைவரும் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபடவேண்டுமென அறிவுறுத்தினார். இதில், ஒன்றியக்குழு பெருந்தலைவர் உதயா கருணாகரன், ஒன்றிய கவுன்சிலர்கள் மோகனா கண்ணன், ஜே.கே.தினேஷ், தமிழ்ச்செல்வி, தமிழ்ச்செல்வன், மலைராஜா, ஊராட்சி கிளை செயலாளர்கள் சாய்ராம், முருகன், சி.ஜெ.கார்த்திக், சங்கர், கமலநாதன், வாசு, புஷ்பராஜ், மெய்யழகன், சண்முகம், ஜான் தினகரன், எஸ்.எம்.சேகர், பாபு, கிறிஸ்டோபர், பார்த்திபன், கண்ணன், ஒன்றிய துணை செயலாளர் ஸ்ரீகாந்த் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: