பொன்னேரி நகர திமுக இளைஞரணி அமைப்பாளர் தற்கொலை

பொன்னேரி: பொன்னேரி நகர திமுக இளைஞரணி அமைப்பாளர் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். பொன்னேரி பாலாஜி நகரில் வசித்து வந்தவர் திவாகர் (32). இவர், பொன்னேரி நகர திமுக இளைஞரணி அமைப்பாளராக இருந்து வந்தார். பொன்னேரி வேண்பாக்கம் பகுதியில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வந்தார். இந்நிலையில், நேற்றிரவு கம்ப்யூட்டர் சென்டரில் மின்விசையில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார் திவாகர்.

இதையறிந்த அவரது மைத்துனர் ராஜேஷ் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கதவை உடைத்து அவரை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். சம்பவம் தொடர்பாக அவரது மனைவி ஜெனிபர், பொன்னேரி போலீசில் புகார் செய்தார். அதில், என் கணவர் திவாகர் சாவில் மர்மம் இருக்கிறது. அதனால் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்ற கூறியிருந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: