வேப்பனஹள்ளி : வேப்பனஹள்ளி பகுதியில் மறுகாய்ப்பு மாங்காய் அறுவடை மும்முரமாக நடைபெற்று வருகிறது. இங்கிருந்து மும்பை, பெங்களூருவுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் தோத்தாபூரி, மல்கோவா, செந்தூரா, நீலம் என அனைத்து வகையான மாங்காய்களும் விளைவிக்கப்படுகின்றன. இங்கு அறுவடை செய்யப்படும் மாங்காய்கள் சென்னை, புதுச்சேரி, பெங்களூரு மட்டுமின்றி மும்பை, குஜராத் மார்க்கெட்டுகளுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.