பெரம்பூர்: பெரம்பூரில் இருந்து மாநகர பேருந்து (த.எ.29சி) நேற்று முன்தினம் இரவு பெசன்ட் நகர் புறப்பட்டது. ஓட்டேரி பிரிக்கிளின் சாலையில் சென்றபோது, போதையில் இருந்த இளைஞர்கள் சிலர் பேருந்தின் முன் பக்க கண்ணாடியை கல் வீசி தாக்கினர். இதில், கண்ணாடி உடைந்தது. உடனே, பயணிகள் கீழே இறங்கி அங்கிருந்த 2 பேரை மடக்கி பிடித்தனர்.
தகவலறிந்து வந்த ஓட்டேரி போலீசார், 2 வாலிபர்களையும் மீட்டு விசாரணை நடத்தினர். அதில், ஓட்டேரி எஸ்.எஸ்.புரம் 8வது தெருவை சேர்ந்த அஜித் (26), காந்தி (24) என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்தனர்.