ஓட்டேரியில் அடுத்தடுத்து 2 மாநகர பஸ்களின் கண்ணாடி உடைப்பு : போதை ஆசாமிகள் கைது

பெரம்பூர்: பெரம்பூரில் இருந்து மாநகர பேருந்து (த.எ.29சி) நேற்று முன்தினம் இரவு பெசன்ட் நகர் புறப்பட்டது. ஓட்டேரி பிரிக்கிளின் சாலையில் சென்றபோது, போதையில் இருந்த இளைஞர்கள் சிலர் பேருந்தின் முன் பக்க கண்ணாடியை கல் வீசி தாக்கினர். இதில், கண்ணாடி உடைந்தது. உடனே, பயணிகள் கீழே இறங்கி அங்கிருந்த 2 பேரை மடக்கி பிடித்தனர்.

தகவலறிந்து வந்த ஓட்டேரி போலீசார், 2 வாலிபர்களையும் மீட்டு விசாரணை நடத்தினர். அதில், ஓட்டேரி எஸ்.எஸ்.புரம் 8வது தெருவை சேர்ந்த அஜித் (26), காந்தி (24) என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்தனர்.

இதேபோல், நேற்று முன்தினம் இரவு பெசன்ட் நகரில் இருந்து பெரம்பூர் நோக்கி வந்த மாநகர பேருந்து (த.எ.29சி), ஓட்டேரி பிரிக்கிளின் ரோடு அருகே வந்தபோது, போதையில் இருந்த நபர், பேருந்து கண்ணாடியை கல் வீசி தாக்கி உடைத்தார். தகவலறிந்து வந்த செயலக காலனி போலீசார், பஸ் கண்ணாடியை உடைத்த ஓட்டேரி எஸ்.எஸ்.புரம் 7வது தெருவை சேர்ந்த ராஜ்குமார் (36) என்பவரை கைது செய்தனர்.

Related Stories: