பொன்னேரி ரயில் நிலையத்தில் தவறான அறிவிப்பால் பயணிகள் அவதி: அதிகாரியிடம் வாக்குவாதம்

பொன்னேரி: சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு கும்மிடிப்பூண்டி, ஆந்திர மாநிலம் நெல்லூர், சூலூர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பொன்னேரி ரயில் நிலையம் வழியாக  அரை மணி நேரத்துக்கு ஒரு மின்சார ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று காலை கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் இருந்து காலை 8.20 மணிக்கு  மின்சார ரயில்  புறப்பட்டது. பொன்னேரி ரயில் நிலையம் அருகே ரயில் வந்துகொண்டிருந்தபோது 4வது நடைமேடையில் ரயில் வந்து செல்லும் என ரயில் நிலைய அதிகாரி தெரிவித்தனர்.

ஆனால் மின்சார ரயில் 3வது நடைமேடையில் வந்துநின்றது. இதனால் பயணிகள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள்  அவசர அவசரமாக தண்டவாளத்திலும் படியிலும்  சென்று சிரமப்பட்டு ரயிலை பிடித்தனர். இதனால் ஆத்திரமடைந்த சில பயணிகள்,  ரயில் நிலைய அதிகாரியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் பொன்னேரி ரயில் நிலையத்தில் சிறிது நேரம்  பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: