காஞ்சிபுரம்: மாண்டஸ் புயல்மழையால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து மக்கள் பாதிக்கப்பட்டனர். இதுபோல் இருளர் இன மக்களும் பாதிப்புக்குள்ளாகினர். மழையால் பாதிக்கப்பட்ட இருளர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில், மாவட்ட கலெக்டர் ஆத்திரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கலெக்டர், இருளர்களுக்கு நிவாரண உதவி வழங்க ஏற்பாடு செய்தார். அதன்படி நிவாரண பொருட்கள் தமிழ்நாடு விவசாய நலச்சங்கம் மற்றும் மலைவாழ் மக்கள் சங்க நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.