கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, 3வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் வாஞ்சி (எ) சதீஷ்(40). பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். மேலும், உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற கிருஷ்ணகிரி மாவட்ட துணை தலைவராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் சதீஷின் மனைவி ராதா, மாமியார் லட்சுமி, மகள் கவிஸ்ரீ உள்ளிட்டோர் இருந்தனர். இரவு 11 மணி அளவில் 7 பேர் கொண்ட கும்பல், வாஞ்சி வீட்டுக்கு வந்து வெளியே நின்றபடி சத்தம் போட்டனர்.
பின்னர் திடீரென்று கையில் வைத்திருந்த பெட்ரோல் குண்டுகளை வீட்டின் மீது வீசினர். சத்தம்கேட்டு வீட்டில் இருந்தவர்கள் சத்தம் போட்டனர். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது.