சென்னை: மழை மற்றும் புயல் காரணமாக சென்னை உட்பட 6 மாவட்டங்களில் நேற்று இரவு பேருந்துகள் இயக்கப்படவில்லை. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழத்த தாழ்வு மண்டலமானது ‘மாண்டஸ்’ புயலாக வலுவடைந்துள்ளது. இதன் காரணமாக நேற்று முதல் 11ம் தேதி வரை 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்யக்கூடும் எனறும், கடலோர பகுதிகளில் மணிக்கு 70 முதல் 85 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று மற்றும் தரைக்காற்று வீசக்கூடும் என்றும், இந்திய வானிலை ஆய்வு மையத்தால் எச்சரித்துள்ளது.