தாம்பரம்: சிங்கப்பெருமாள் கோயில் அருகே ரயில் மோதி காதல் ஜோடி பலியான சம்பவம் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதுகுறித்து தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அலெக்ஸ் (24). செங்கல்பட்டு அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் நண்பர்களுடன் வாடகைக்கு வீட்டில் தங்கி, மறைமலைநகர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரும், அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்த தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஷெர்லின் (20) என்பவரும் கடந்த 8 மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்து செல்லும் பகுதியில் இரவு நேரங்களில் அடிக்கடி சந்தித்து பேசுவது வழக்கமாம்.