பெரம்பலூர்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பெரம்பலூரில் அளித்த பேட்டி: தமிழக அரசு நிறைவேற்றிய 60க்கும் மேற்பட்ட மசோதாக்கள் ஆளுநர், குடியரசு தலைவரிடம் நீண்ட நெடுங்காலமாக கிடப்பில் உள்ளன. அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை கூட குடியரசு தலைவர் ஒப்புதல் கொடுக்கவில்லை. திமுக ஆட்சிக்கு வந்து ஏகமனதாக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய 26 மசோதாக்கள் ஆளுநர் பரிசீலனையில் இருப்பதாக கூறி கிடப்பில் போட்டுள்ளார். ஒன்றிய அரசாங்கமும், மாநில ஆளுநரும் தமிழ்நாட்டின் நலன்சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது மக்களுக்கு செய்யும் துரோகம்.