நாமக்கல் : நாமக்கல் அருகே மின்மாற்றி வெடித்து 10 கிராமங்களுக்கு மின்சாரம் தடைப்பட்டதால் மார்சிஸ்ட் கட்சியினர் தலைமையில் கிராம மக்கள் தீப்பந்த போராட்டம் நடத்தினர். எலச்சிபாளையத்தில் அமைக்கப்பட்டு இருந்த மின்மாற்றி நேற்று பிற்பகல் திடீரென வெடித்ததால் எலச்சிபாளையம், பொன்னையார், ஆயித்தாக்குட்டை, காரியம் பாளையம், ஓலப்பாளையம் உள்ளிட்ட 10 கிராமங்களுக்கு மின்சாரம் தடைப்பட்டது. இரவு நெடுநேரமாகியும் மின்சாரம் வழங்கப்படாததால் கிராம மக்கள் இருளில் தத்தளித்தனர். கை குழந்தைகள், முதியோர் பெரும் அவதிக்கு ஆளானார்கள்.