ஏரியில் மீன்பிடிக்க 9 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் கூனங்குப்பம் மக்கள் போராட்டம்

திருவள்ளூர்: பழவேற்காடு அருகே கூனங்குப்பம் மீனவ கிராம மக்கள் ஊரைவிட்டு வெளியேறும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மீன்பிடி பிரச்சனையால் 500க்கும் மேற்பட்டோர் மீன்பிடி வலைகளுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றனர். திருவள்ளூர் ஆட்சியர் அலுவகத்தில் ஆவணங்களை ஒப்படைக்க ஊரைவிட்டு வெளியேறி நடந்து செல்கின்றனர். பழவேற்காடு ஏரியில் மீன்பிடிக்க 9 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் கூனங்குப்பம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: