சென்னை: மாதவரத்தில் உள்ள அரபி மதராசா பள்ளியில் பீகாரை சேர்ந்த 12 குழந்தைகள் போலீஸாரால் மீட்கப்பட்டனர். 15 வயதுள்ள 12 குழந்தைகள் உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. குழந்தை நல மையம் அளித்த புகாரின் பேரில் மாதவரம் போலீசார் மதராசா பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.