சென்னை: ரப்பர் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; அரசு ரப்பர் கழக தொழிலாளர்களுக்கு 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2022-ம் ஆண்டு நவம்பர் வரை நாளொன்றுக்கு 40 ரூபாய் ஊதிய உயர்வு ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆனால் ரப்பர் கழகம் ஊதியம் தர மறுத்ததால் கடந்த 7-ம் தேதியில் இருந்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.