சென்னை: உயர்கல்வியில் தமிழ்நாடு தான் முன்னோடி என ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருதுநராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் உரையாற்றிய அவர்; தாய் மொழியில் படித்தால்தான் அறிவை வளர்க்க முடியும். புத்தக அறிவு மட்டும் மாணவர்களுக்கு போதாது. திறன் கொண்ட கல்வியே மாணவர்களை முழுமையாக்கும். அத்தகைய மாணவர்களை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும். கற்பிக்கும் முறை தற்போது மாறி வருகிறது.