சென்னை: ஓய்வு பெற்ற கூடுதல் எஸ்பியும், ராஜிவ் கொலை வழக்கில் முக்கிய சாட்சியுமான அனுசுயா டெய்சி எர்னஸ்ட் நேற்று சென்னை மாநகர போலீஸ் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் தமிழக காவல்துறையில் 1981ம் ஆண்டு எஸ்ஐயாக பணியில் சேர்ந்தேன். கடந்த 37 வருடம் சிறப்பாக பல்வேறு பிரிவுகளில் பணியாற்றியுள்ளேன். நான் 1991ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி தேர்தல் பிரசார கூட்டத்திற்கு ஸ்ரீபெரும்புத்தூரில் பாதுகாப்பு பணியில் இருந்தபோது மனித வெடி குண்டில் காயம் அடைந்தேன். குண்டு வெடிப்பில் நான் கண்ணால் கண்ட சாட்சி என்பதால், குற்றவாளிகளுக்கு எதிராக சாட்சியம் அளித்தேன். நளினியை அடையாளம் காண்பித்தேன். இந்த வழக்கில் நளினி உட்பட 26 பேருக்கு சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. குற்றவாளிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ததால் தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனை ஆனது. பிறகு அவர்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் நன்னடத்தையுடன் இருந்ததால் விடுவிக்கப்பட்டிக்கிறார்கள்.