ஈரோடு : கோபி சுற்றுவட்டாரத்தில் தொடரும் கனமழை காரணமாக அணைகள் நிரம்பி நீர்கள் வெளியேறுவதால் சத்தி - அந்தியூர் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டி பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. கள்ளிப்பட்டி அருகே தொடர்ந்து பெய்த மழையால் கொண்டையம்பாளையம் என்ற இடத்தில் தரப்பாலத்திற்கு மேல் சுமார் 3 அடி நீளத்திற்கு மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.