கடையின் பூட்டை உடைத்து ரூ.5 ஆயிரம், காப்பர் திருடிய 2 பேர் கைது

பெரம்பூர்: கொடுங்கையூர் சந்திரசேகரன் நகர் 2வது தெருவை சேர்ந்த முத்து (47), கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகர் டிவிகே லிங்க் ரோட்டில் காயலான் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் காலை வழக்கம் போல், கடையை திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, கள்ளாவில் இருந்த ரூ.5 ஆயிரம் மற்றும் காப்பர் கம்பிகள் திருடு போனது தெரிந்தது. இதுகுறித்து கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, விசாரணை நடத்தினர். அதில், பல்வேறு திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய வியாசர்பாடி இந்திரா நகர் 20வது தெருவை சேர்ந்த மனோஜ் (எ) கவுதம் (19), கடையில் திருடியது தெரிந்தது. அவரையும், அவருக்கு உதவியாக இருந்த கொடுங்கையூர் ஆர்.ஆர்.நகரை சேர்ந்த மணிகண்டன் (எ) ஜோன் மணி (21) என்ற நபரையும் போலீசார் கைது செய்தனர்.

Related Stories: