பொன்னேரி: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, நேற்று மாலை மீஞ்சூரில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் மீஞ்சூர் பேரூர் திமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பேரூர் செயலாளர் தமிழ் உதயன் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர் சிவராமன், நகர இளைஞரணி செயலாளர் மில்லர், முன்னாள் பேரூர் செயலாளர் லெனின், மாவட்ட பிரதிநிதி சசிகுமார், முன்னாள் பேரூராட்சி தலைவர் ராஜேந்திரன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தில்லை குமார், ஆனந்தகுமார் ஆகியோர் பங்கேற்று, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர்.