திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் துறை சார்பில் மகளிருக்கான வேலை வாய்ப்பு முகாம் நடத்த மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து மகளிருக்கான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் மற்றும் டாடா நிறுவனத்தின் மகளிருக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடத்தியது. மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் உதவி இயக்குனர் க.விஜயா தலைமை தாங்கினார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பொறுப்பு) ஜி.ந.காமராஜ் வரவேற்றார். மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் மற்றும் இணை இயக்குனர் கோ.மலர்விழி முன்னிலை வகித்தார்.