பொன்னேரி: வடசென்னை அனல் மின்நிலையத்தில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக இன்று காலை 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இங்குள்ள 3 அலகுகளில் பல்வேறு பழுது காரணமாக இதுவரை மொத்தம் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. மீஞ்சூர் அருகே அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல் மின்நிலையத்தில் முதலாவது நிலையின் 3 அலகுகளில் தலா 210 மெகாவாட், இரண்டாவது நிலையின் 2 அலகுகளில் தலா 600 மெகாவாட் என மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், முதல் நிலையில் உள்ள 2வது அலகில் இன்று காலை கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.