சென்னை: நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றிவரும் சாலை ஆய்வாளர்கள் சங்க பிரதிநிதிகளின் கோரிக்கைகளை ஆராய்ந்து அறிக்கை அளிக்க குழு அமைக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். சென்னை தலைமை செயலகத்தில் நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றிவரும் சாலை ஆய்வாளர்கள் சங்க பிரதிநிதிகள், அமைச்சர் எ.வ.வேலுவை சந்தித்து பல்வேறு சங்க கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர்.