சென்னை: சென்னையில் அரசு உதவி பெறும் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 3 கார்கள் மற்றும் பைக் சேதமடைந்தது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதிக்கு உட்பட்ட டாக்டர் பெசன்ட் சாலையில் 50 ஆண்டுகள் பழமையான அரசு உதவி பெறும் என்.கே.டி பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். அதன்படி, நேற்று காலை வழக்கம் போல் பள்ளி முடிந்து மாணவர்கள் வீட்டிற்கு சென்றனர். மேலும் பள்ளியை சுற்றி சுமார் 15 அடி உயரம், 500 மீ நீளம் கொண்ட சுற்றுச்சுவர் உள்ளது. சென்னையில் பெய்த மழையின் காரணமாக சுற்றுச்சுவரில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்து காணப்பட்டுள்ளது.