சென்னை: தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆன்லைன் மூலம் நடத்த கோரிய வழக்கில் தமிழக அரசு, மருத்துவ கவுன்சில் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாக்குச்சீட்டு முறை முழுக்க முழுக்க துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக மதுரை மருத்துவர் சையத் தாஹிர் உசேன் புகார் தெரிவித்தார். அரசு மருத்துவர்களின் ஓட்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதால் வாக்குச்சீட்டு முறையிலான தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய கோரிக்கை விடுத்திருந்தார்.