கொலை வழக்கில் தலைமறைவான சென்னையை சேர்ந்த ரவுடி தர்மபுரியில் சுற்றிவளைப்பு

அண்ணாநகர்: நெற்குன்றம் பகுதியை சேர்ந்த ரவுடி தனஞ்செழியன் (36),  கடந்த 2019ம் ஆண்டு கோயம்பேட்டில் ரவுடி நாராயணன் என்பவரை  கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின்னர் ஜாமீனில் வெளியே வந்த தனஞ்செழியன் எழும்பூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகி வந்தார். இந்நிலையில், கடந்த    இரண்டு வருடமாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானார்.

இதையடுத்து, ரவுடி தனஞ்செழியினை கைது செய்யும்படி நீதிமன்றம் கோயம்பேடு போலீசாருக்கு உத்தரவிட்டது. அதன்பேரில், கோயம்பேடு போலீசார் அவரை தேடிவந்தனர். இந்த நிலையில், தனஞ்செழியன் தர்மபுரி மாவட்டத்தில் பதுங்கி இருப்பதாக  போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து  போலீசார் நேற்று தர்மபுரியில் பதுங்கி இருந்த ரவுடியை கைது செய்தனர். பின்னர், அவரை சென்னை அழைத்து வந்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: