திருவொற்றியூர்: மணலி மண்டலத்தில் ரூ.2.31 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பூங்காக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். மணலி மண்டலம் 15வது வார்டுக்குட்பட்ட துளசி நகரில் ரூ.66 லட்சம் செலவில், 17வது வார்டு வி.எஸ்.மணி நகரில் ரூ.1.27 கோடி செலவில், 19வது வார்டு கோகுலம் நகரில் ரூ.38 லட்சம் செலவில் என 3 இடங்களில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 31 லட்சம் மதிப்பீட்டில் புதிய பூங்கா அமைக்க மாநகராட்சி திட்டமிட்டு இதற்கான பணிகள் நடைபெற்றது.